பராமரிப்பு இல்லாத காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பூங்கா
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பூங்கா அதிகமான மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது.குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொருட்கள் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் விளையாட முடியாமல் செல்கிறார்கள் அதேபோல் அமருவதற்கான இருக்கைகள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. செடிகளுக்கு தண்ணீர் விடும் பழுப்புகள் பழுதாகி உள்ளது. அதேபோல் மாணவர்கள் பூங்கா உள்ளே சைக்கிள் கொண்டு வருகிறார்கள் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் இங்கு விளையாடுவதால் நடந்து செல்பவர்களுக்கு சிரமமாக உள்ளது.
குழந்தைகள் விளையாட்டு பொருள், உடற்பயிற்சி பொருட்கள் சரி செய்து தர வேண்டும், அதேபோல் நடந்து செல்பவர்கள் அமர்வதற்கு இருக்கைகள் சரி செய்ய வேண்டும். குழாய்கள் பழுது நீக்கி எல்லா செடிகளுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் இல்லாமல் இருப்பதால் கண்ட இடங்களில் குப்பை போடுகிறார்கள் அதனால் குப்பைத் தொட்டிகள் அதிகமாக வேண்டும்.
அண்ணா பூங்காவில் நேரக் கட்டுப்பாடு இருந்தால் சரியாக இருக்கும் காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும் நேரத்தை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும், இதனால் தேவையில்லாத சம்பவங்கள் பூங்காவில் நடைபெறுவதை தடுக்க முடியும். இது உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சரி செய்வார்களா






கருத்துகள் இல்லை