Header Ads

  • சற்று முன்

    திருவள்ளுர் அடுத்த மப்பேடு பள்ளி விடுதியில் மாணவி தூக்கிலிட்டு தற்கொலை

    மப்பேடு அருகே கீழச்சேரி ஊராட்சி அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி  12ம் வகுப்பு படிக்கும் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சரளா, 17 துாக்கிட்டு தற்கொலை

    திருவள்ளுவர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  கீழச்சேரி ஊராட்சி அரசு நிதி உதவி பெறும் செக்கார்டு மகளிர்  மேல்நிலைப்பள்ளி உள்ளது.இந்த பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படிக்கும் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சரளா, 17 இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர் அப்போது தனியாக இருந்த மாணவி சரளா தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளார்

    இதனால் இந்த பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தகவல் அறிந்த திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர்  சந்திர தாசன்.உதவி ஆய்வாளர்  இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து சம்பவ இடத்தில்  திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad