• சற்று முன்

    ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்திற்கான பேருந்தினை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.




    புதிய வழிதட பேருந்து வேண்டி நீண்ட நாள் கோரிக்கையான சடையம்பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், மேட்டுக்கடை பகுதிகளில் உள்ள பொது மக்கள்,பள்ளி மாணவ, மாணவியரின் கோரிக்கையை ஏற்று ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்திற்கான பேருந்தினை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.


    இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், சென்னிமலை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ப. செங்கோட்டையன்,மாவட்ட கழக துணை செயலாளர் ஆ. செந்தில்குமார்,  காயத்ரி இளங்கோவன்,கதிரம்பட்டி மகாலிங்கம், ரகு,போக்குவரத்து கழகத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad