• சற்று முன்

    2 லட்சம் மின் இணைப்புகளை வழங்கி தமிழக முதல்வர் மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என கரூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு.

     

    பல ஆண்டுகளாக பதிவு செய்து ஏக்கத்தோடு காத்திருந்த விவசாயிகளுக்கு, 2 லட்சம் மின் இணைப்புகளை வழங்கி தமிழக முதல்வர் மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என கரூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு.

    கரூர், தான்தோன்றிமலையில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்றன. இதில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     செய்தியாளர் விக்னேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad