வேலூர் ஸ்ரீபுரம் கோயிலில் தேசிய அளவிலான 7-வது நந்தி நடன நாட்டிய விழா ஸ்ரீபுரம் பொற்கோயிலில் நடைபெற்றது
வேலூர் மாவட்டம், வேலூர் ஸ்ரீபுரம் கோயிலில் தேசிய அளவிலான 7-வது நந்தி நடன நாட்டிய விழா ஸ்ரீபுரம் பொற்கோயில் மேனேஜிங் டில்டி Dr. சுரேஷ் பாபு, மற்றும் ஸ்ரீ சாய் நாட்டியஞ்சலி பைனான்ஸ் டெவலப்மென்ட் அசோசியேசன் செக்ரெட்டரி Dr. பல்லம் செட்டி சுரேஷ், நாட்டிய குருமார்கள் , தர்வன்,ஸ்ரீநிவாஸ் ராஜேஷ், ஆகியோர் நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் குச்சி புடி பரதநாட்டியம் ,கதக்களி, (வன) நாட்டியம், காணபதம், ஆந்திரா நாட்டியம்,போன்ற நடனங்கள் 300க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் , வெவ்வேறு பிராந்தியங்களில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.
ஆந்திர பிரதேசம்,தெலுங்கானாா, கர்நாடகா,மேற்கு வங்காளம், போன்ற பிராந்திய கலைஞர்கள் பங்கேற்றனர். ஸ்ரீபுரம் பொற்கோயில் மேனேஜிங் டில்டி Dr. சுரேஷ்பாபு பாரதத்தின் பழம்பெருமை பாரதத்தின் ,பாரம்பரியம், கலைகள், ஆகியவற்றை காப்பது நம் கடமை என்று சிறபுரையாற்றினார். விழாவில் குருமார்கள் சேவை மனப்பான்மை உடையவர்கள், தன்னார்வலர்கள்,ஆலய சேவகர்கள். மற்றும் நடன கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் : S. சுதாகர்
கருத்துகள் இல்லை