Header Ads

  • சற்று முன்

    மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே தென்கரையில் சூரசம்ஹார விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத மூல நாத சுவாமி திருக்கோவிலில் அருள் பாலிக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பதினோராம் ஆண்டு சூரசம்ஹார பெருவிழா கோயில் வளாகத்தின் முன்பாக நடைபெற்றது.

    சூரசம்காரவிழா கடந்த எட்டாம் தேதி கணபதி ஹோமம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஐப்பசி 13ஆம் தேதி மாலை 3:30 மணி அளவில் வேல் வாங்கல் நிகழ்ச்சி நடைபெற்று முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தார். அப்போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று பக்தி பெருக்குடன் கோசமிட்டனர். தொடர்ந்து அதிர்வேட்டுக்கள் முழங்க தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. இன்று மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad