திருவில்லிபுத்தூர் ஸ்ரீசீனிவாசப்பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம்..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை, ஸ்ரீசீனிவாசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ம் சனி கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீசீனிவாசப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் பூரண சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புரட்டாசி 3ம் சனி கிழமையை முன்னிட்டு விருதுநகர், சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூரில் இருந்து அரசு போக்குவரத்துகழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள், சிரமங்கள் இல்லாமல் திருவண்ணாமலை ஸ்ரீசீனிவாசப்பெருமாள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை