Header Ads

  • சற்று முன்

    மேலக்கால் ஊராட்சியில் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை



    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் மேலக்கால் கச்சிராயிருப்பு கீழமட்டையான் ஆகிய கிராமத்திற்கு உட்பட்ட ஒன்பது வார்டுகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் குறிப்பாக மேலக்கால் கிராமத்தில் மட்டும் சுமார் 2000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் மேலக் காலில் இருந்து பணி நிமித்தமாக தினந்தோறும் மதுரை திருமங்கலம் உசிலம்பட்டி வாடிப்பட்டி போன்ற நகரங்களுக்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்று வருகின்றனர் இந்த நிலையில் பேருந்து நிறுத்தங்களில் எந்த ஒரு நிழற்குடை வசதிகளும் இல்லாததால் பேருந்து காக வெகு நேரம் காத்திருக்கும் சூழ்நிலையும் மழை வெயிலில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும்  மேலக்கால் ஊராட்சி பகுதி மற்றும் வைகை புதுபாலம் பகுதி ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


     முக்கியமாக வைகைப் புது பாலம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில்  பழுதடைந்த சாலைகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் ஆகையால் சாலைகளை உடனடியாக சரி செய்து விபத்துகளை  தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முக்கியமாக வைகை புது பாலம் பகுதியில் நிழற்குடை உடனடியாக ஏற்படுத்தி தர ஊராட்சி நிர்வாக சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad