Header Ads

  • சற்று முன்

    ராஜபாளையம் அருகே, கழிவு பஞ்சு நூல் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து.....

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கம்மாபட்டி பகுதியில், ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர், நந்தா என்பவர்களுக்கு சொந்தமான கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஆலை உள்ளது. நேற்று நூல் தயாரிப்பு ஆலையில், திடீரென்று மின் இணைப்பு செயல் இழந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் மின்சாரம் வந்த போது, அதிக மின்னழுத்தம் காரணமாக பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் இயந்திரத்தில் தீப்பொறி விழுந்து, பஞ்சு பொதிகள் தீப்பிடித்து எரியத் துவங்கியது. 

    அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. உடனடியாக ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு பொதிகள் மற்றும் நூல் தயாரிக்கும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமானது. விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad