பராமரிப்பில்லாத பொது கழிப்பிடம்
சென்னை ராயபுரம் வார்டு 49 ஜி.ஏ. ரோடு பாலு தெருவில் சிறுநீர் கழிப்பிடம் கடந்த ஓரு ஆண்டுகளாக சேதமடைந்து புனரமைக்காமல் காணப்படுகிறது.
பொது மக்கள் பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் சிறுநீரின் துர்நாற்றத்தினால் சாலை வழியாக செல்லும் மக்கள் மூக்கை பிடித்து செல்லுகிறனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை