Header Ads

  • சற்று முன்

    பல்லாவரத்தில் சிறப்பாக நடைப்பெற்ற வொண்டர் அகடமி சிபிஎஸ்சி பள்ளி திறப்பு விழா மற்றும் ஆண்டு விழா

    சென்னை அடுத்த பல்லாவரத்தில் வொண்டர் அகடமி சி.பி.எஸ்.சி பள்ளி  திறப்பு விழா மற்றும் ஆண்டு விழா தலைவரும், நிறுவனருமான  செய்யது சிராஜீத்தீன் தலைமையில்  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுசெயலாளர் ஹாஜாகனி பள்ளியை திறந்து வைத்தார். இதில்  பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் காமராஜ்,   தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி,  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் சிறந்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில் தாம்பரம் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ஹனிபா மதினா பேகன், தாம்பரம் மாமன்ற உறுப்பினர் லதா சிவக்குமார், அரபிக் கல்லூரி முதல்வர் ஆதாம் ஸபியுல்லா, தமிழ் ஆசிரியர் அலமேலு, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அப்துல் ரகுமான், இப்ராஹிம், பாஃருக் அகமது மற்றும் யூனுஸ், ரஹ்மத்துல்லாஹ் சௌகத் அலி, பராவுத்துல்லா, பாஷா அப்துல்காதர், கோரா பகபூம், அப்துல்லா சாதிக் பாஷா திமுக, தமுமுக, நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad