Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூரில் மகளிர் குழு நடத்திய தேர்தல் விழிப்புணர்வு பேரணி

    திருப்பத்தூரில் மகளிர் குழு நடத்திய தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் வாக்குகள் விற்பனைக்கல்ல 100% வாக்களியுங்கள் மாவட்ட ஆட்சியர் சிவனருள் பேச்சு 

    திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டிய கடமையை வலியுறுத்தி நமது வாக்கு நமது உரிமை  வாக்களிப்பது நமது கடமை என்கிற தலைப்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை  மகளிர் குழு பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தூய நெஞ்சக் கல்லூரி வரை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



    இதில் 100க்கும் மேற்பட்ட மகளிர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்களை கொண்ட பாதாகைகளை ஏந்தி எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற கோஷங்கள் எழுப்பிஊர்வலமாக  சென்றனர். இறுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் பேசுகையில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் வாக்குகள் விற்பனைக்கல்ல என்று வலியுறுத்தி அச்சமின்றி 100% வாக்களியுங்கள்  அனைவரும் வாக்குச் சாவடிக்குச் சென்று 100 சதவிகித வாக்கை பதிவிடுங்கள் அனைவரும் அவரவர் கிராமங்களில் வீட்டு பக்கத்தில் உள்ள நபர்களுக்கு தேர்தல் குறித்தும் வாக்களிப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று அறிவுரை கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad