Header Ads

  • சற்று முன்

    வடபத்திரகாளியம்மன் கோவில் அமிர்தகடேசுவரா் சமேத அமிர்தவல்லி அம்மனுக்கு 3ஆம் ஆண்டு திருக்கல்யாண வைபம்

    அகில இந்திய நாடார் சக்தி நடத்தும் சிங்காரத்தோட்டம் அருள்மிகு சின்ன சேனியம்மன் அருள்மிகு வடபத்திரகாளியம்மன் கோவில் அமிர்தகடேசுவரா் சமேத அமிர்தவல்லி அம்மனுக்கு 3ஆம் ஆண்டு திருக்கல்யாண வைபம் சென்னை சிங்காரத்தோட்டத்தில் அமைந்துள்ள சின்னசேனியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

    அருள்மிகு சின்ன சேனியம்மன்,வடபத்ரகாளியம்மனுக்கும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அன்னையர் இருவருக்கும் மகா வேள்வியுடன் அமிர்தகடேசுவரா் சமேத அமிர்தவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டும் அகில இந்திய நாடார் சக்தி நாடார் மகாஜன மகளிர் சங்கம் சீர்வரிசை ஊர்வலத்துடன் கோவில் வந்தடைந்து திருக்கல்யாணம் செய்து அன்னையர் இருவருக்கும் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்புமாக நடைபெற்றது.


    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வடசென்னை கிழக்கு மாட்டதலைவர் எம்.கிருஷ்ணகுமார்,மாவட்ட பொதுசெயலாளர் எஸ்.வன்னியராஜன்,மாவட்ட துணைத்தலைவர் பி.எஸ் பாஸ்கரன்,இராயபுரம் மத்திய தொகுதி தலைவர் எஸ்.ரூப்சந்தர்,ஓ.பி.சி அணி மத்திய மண்டல் தலைவர் ஆதி சங்கர்,பொருளாதார பிரிவு ஜே.வி.சி வெங்கடேசன்,இராயபுரம் தொகுதி மத்திய ஊடக பிரிவு தலைவர் சி.சண்முக பாலாஜி மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவியர்கள் பரத நாட்டியம் நிகழத்தி காட்டினர்.பரத நாட்டியம் நிகழ்த்தி காட்டிய மாணவியர்களுக்கு கேடயமும்,பதகங்களும், சான்றிதல்களும் வழங்கபட்டது.

    நிகழ்ச்சி இறுதியில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் பிரசாத பைகளும் வழங்கபட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad