கோவில்பட்டியில் மாற்று கட்சியிலிருந்து விலகி அ.ம.மு.க.வில் இணைத்தனர்.
அதிமுக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.
கோவில்பட்டி தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், கயத்தாறில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திருமதி.ராணி ரஞ்சிதம் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து ஆசி பெற்றார். இதைத்தொடர்ந்து சாத்தூர் கழக வேட்பாளர் திரு. ராஜவர்மன் தலைமையில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக, மதிமுக நிர்வாகிகள், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அப்போது கழக தேர்தல் பிரிவு செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான திரு. S.V.S.P. மாணிக்கராஜா, திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. வி பி. குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை