Header Ads

  • சற்று முன்

    திருவாரூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 200 மேற்பட்டோருக்கு வந்தி பேதி மயக்கம்


    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா குவளைக்கால் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நேற்று நடைபெற்றது அந்த திருவிழாவில் சுண்டல், புளிசாதம், பொங்கல் விநியோகம் செய்தனர். 


    இந்த பிராசாதம் சாப்பிட்டதால் குழந்தை உள்பட 200 க்கும் மேற்பட்டோருக்கு இன்று காலை வாந்தி மயக்கம் பேதி ஏற்பட்டுள்ளது. குவளைக்காளில் மருத்துவ குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. 30 பேருக்கு வாந்தி பேதி அதிகம் உள்ளதால் அவர்களை நன்னிலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இச்சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் பிரசாதம் சாப்பிட்டதால் இல்லை வேறு ஏதும் பிரச்சனையா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை இல்லாதாதால் ஒவ்வொரு படுக்கையிலும் இரண்டு பேர் படுத்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad