Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே எட்டயபுரம் புதுமாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா – அமைச்சர் பங்கேற்பு



    கோவில்பட்டி  அருகேயுள்ள எட்டயபுரம் புதுமாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா இன்று காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கியது, தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதன் பின்னர் புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, புதுமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் விமானகோபுரங்களுக்கு மேள தள முழங்க நீர் ஊற்றப்பட்ட மகாகும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையெடுத்து புதுமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலாங்கார தீபாரதனைகள் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், எட்டயபுரம் நகர செயலாளர் ஆழ்வார்.உதயக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், வண்டனம் கருப்பசாமி, ஜெமினி(எ) அருணாச்சலசாமி மற்றும்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகாகும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad