Header Ads

  • சற்று முன்

    ..பி .ஜே .பி .புகழாரம் பாடிய செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் .......

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த மத்திய அரசு விழாவில் பங்கேற்ற தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மோடிஅரசை புகழ்படி பேசியது அதிமுகவினர் இடையே  பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    தனியார் பொறியியல் கல்லூரியில்கோவில்பட்டி கோட்ட தபால்  அலுவலகம் சார்பில்தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்களின்ஆதார் எண் மற்றும் மொபைல் எண் இணைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகசெய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்கடம்பூர்.செ.ராஜீ மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங்தியகராஜ் நட்டர்ஜீ ஆகியோர்கலந்து கொண்டு ஆதார் எண் மற்றும் மொபைல் எண் இணைக்கும் பணியினை தொடங்கி வைத்தனர்

    இதனை தொடர்ந்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீசெய்தியாளர்களிடம் பேசுகையில் ‘மத்தியரசு

    அறிவிக்கின்ற நல்ல திட்டங்களை தமிழக அரசுசிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாகதூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி முதலிடம்வகிக்கிறது. இயற்கை இடர்பாடுகள்,தொற்றுநோய்கள் பரவும் போது எதிர்க்கட்சிகள்குறைகள் கூறுமால் ஆலோசனை தரவேண்டும்,எதிர்கட்சி தலைவர் குற்றம் சொல்வதை தவிர ஆக்கபூர்மான ஆலோசனைகளை சொல்வதில்லை இருக்கின்ற நிலையை வேடிக்கை பார்க்கசெல்கின்றார்.  ஆனால் அரசு அவ்வாறு செயல்பட முடியாது. இன்றைக்கு 3 அமைச்சர்கள் வீதம்  ஒவ்வொரு மண்டலத்திலும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் அனைத்தும் சரி செய்யப்படும்.’ - என்று கூறினார்.

                                                                                                                                                                                                                                                                                      -  இளசை மு.லெனின்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad