நம் கலாசார, பண்பாடு விஷயத்தில் கமல் மந்தம் தான் - எச் .ராஜா
நதிகளை தெய்வமாக கும்மிடுவது தமிழர்ளின் வழக்கம் அந்த விஷயத்தில்
கமல் கொஞ்சம் மந்தம் என்று பிஜேபி பொதுச்செயலாளர் எச். ராஜா அறிவித்துள்ளார் .
கமல் அரசியலுக்கு வர தகுதியற்றவர் என்ற கருத்தையும் எச்.ராஜா முன்வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கழிமுகத் துவாரத்தை நடிகர் கமல் பார்வையிட்டார்.
ஆறே காணாமல் போய்விட்டது
இதையடுத்து அடையாறில் நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்தார். அப்போது கமல் பேசுகையில் தமிழகத்தில் இருக்கும் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகின்றன. ஒரு ஆறே காணாமல் போய்விட்டது. அதுகுறித்து விரைவில் தகவல் வெளியே வரும்.
குறும்படம் வெளியீடு
அந்த காணாமல் போன ஆறு குறித்து விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன். ஏரி, குளங்களை சாமியாக வழிப்படுங்கள் என்று கமல் கூறினார். இதையடுத்து மத்திய- மாநில அரசுகளை பாரபட்சமின்றி விமர்சித்தார்.
அரசியல் பிரவேசம்
கமல்ஹாசன் அடுத்தடுத்த செயல்பாடுகள் அரசியலுக்கு அவர் வருவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அவரது செய்கைகளால் சில அரசியல்வாதிகள் அச்சத்தில் உள்ளனர்.







கருத்துகள் இல்லை