செயல்படாத அரசு பறிபோகும் உயிர்கள் - முத்தரசன்
சென்னை : செயல்படாத தமிழக அரசால் மக்கள் உயிரும், உடமைகளும், உற்பத்தியும் பறிபோகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் பருவமழை கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல இடங்களில் பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழை தடுப்பு நடவடிக்கைகளை அரசு சரியாகச் செய்யவில்லை என்று அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக இன்று இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், சென்ற ஆண்டு பருவமழை தவறியதன் காரணமாக தமிழகம் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியது.
-வின் மதி
-வின் மதி
கருத்துகள் இல்லை