வேலைவாய்ப்பு முகாம் 133 பேருக்கு பணி ஆணை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 133 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று முகாம் நடந்தது. இந்த முகாமில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 32 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 302 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், 133 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.






கருத்துகள் இல்லை