கோவில்பட்டியில் பட்டா கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி பகுதியில் உள்ள மந்திதோப்பு நகர் துளசிங்கி நகர் பகுதியில் நீண்ட நாட்களாக வாழும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக்கோரி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவில்பட்டி தாலுகா தலைவர் பாபு தலைமையில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை தாலுகா அலுவலகத்தில் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை