வேலூர் கல்லூரி மாணவனை அடித்து கொன்ற நண்பர்கள்பாகாயம் காவல்துறையினர் மாணவரின் சடலத்தை மீட்டு விசாரணை
வேலூர்மாவட்டம்வேலூரில் உள்ள ஊரிசு கல்லூரியில் பி.ஏ.டிபன்ஸ் 2-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பத்தியாவரத்தை சேர்ந்தவர் ஆனந்த் என்பவரின் மகன் டேனிவளனரசு (வயது 19).படித்து வந்தார். வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் 3-வது மாடியில் வாடகைக்கு தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.அவருடன் ஆரணி, இந்திரா நகர், தொந்திகரம் பட்டுவை சேர்ந்தவர் கிஷோர் கண்ணன் ( 19). பாண்டிச்சேரியை சேர்ந்தவர் பார்த்தசாரதி ( 19). தர்மபுரியை சேர்ந்த 18 வயதுடைய வாலிபர் ஆகியோர் தங்கி இருந்தனர். கடந்த 25-ஆம் தேதி தர்மபுரியை சேர்ந்த வாலிபர் தனது சொந்த ஊருக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து டேனி வளனரசுவும், கிஷோர் கண்ணனும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பின்னர் மீண்டும் கடந்த 1-ஆம் தேதி புத்தாண்டு அன்று வேலூருக்கு வந்தனர். நேற்று நள்ளிரவு நண்பர்கள் தங்கியிருந்த அறையில் டேனி வளனரசு கொலை செய்யப்பட்டார். பின்னர் டேனி வளனரசு உடலை பார்த்தசாரதி மற்றும் கிஷோர் கண்ணன் பைக்கில் வைத்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள சித்தப்பாறை கிராம மலையடிவாரத்தில் வீசிவிட்டு வீசி விட்டு சென்றனர். இதனிடையே டேனி வளனரசுவை அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டனர். அவரை தொடர்பு கொள்ள முடியாததால் மகனை கண்டுபிடித்து தருமாறு பாகாயம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் டேனி வளன அரசுவை தேடி வந்தனர். பின்னர் அவரது நண்பர் கிஷோர் கண்ணனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்.விசாரணையில் பார்த்தசாரதி தான் டேனி வளனரசுவை கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பார்த்தசாரதி புதுச்சேரியில் பதுங்கி உள்ளதாக தெரியவந்தது.அவரைப் பிடிக்க காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.பார்த்தசாரதி தான் டேனி வளனரசுவை கொலை செய்ததாக கிஷோர் கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்து வருகிறார். பார்த்த சாரதியை பிடித்த பின்னர் தான் டேனி வளனரசுவை யார் கொலை செய்தார்கள் எதற்காக கொலை செய்தார்கள் என்பது தெரியவரும். மாணவனின் உடலை மீட்ட பாகாயம் காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
டேனி வளனரசுவை இரும்புராடால் சர மாரியாக தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்துபல்வேறு கோணங்களில் பாகாயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்






கருத்துகள் இல்லை