குடியாத்தம் நகராட்சியில் ஷெரிஃப் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் ஷெரிஃப் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன், வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா, மக்கள் பிரதிநிதிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ்
கருத்துகள் இல்லை