Header Ads

  • சற்று முன்

    வேலூர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மாநகராட்சி மேயர் சுஜாதா!


    வேலூர் மாநகராட்சி 34 வது வார்டில் உள்ள வசந்தபுரம் பகுதியில் காணாறு கால்வாய் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அப்பகுதி மக்களிடம் குப்பைகளை கால்வாயிலும், பொது இடங்களிலும் கொட்ட வேண்டாம், தூய்மை பணியாளர்கள் வரும்போது அவர்களிடம் மட்டுமே தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த குப்பைகளை கால்வாயில் கொட்டுவதால் கால்வாய் அடைப்பு ஏற்படுவதுடன் தண்ணீர் செல்வது தடைபடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது என்றும் அப்போது வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நோய்நொடிகள் பரவாமல் இருக்கும் என்று அவர் அறிவுரைகளை வழங்கினார்.

    செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad