Header Ads

  • சற்று முன்

    வேலூர் மாவட்டத்தில் யானைகள் குறித்த கணக்கெடுப்பு பணி 23ல் தொடக்கம்!



    வனத்துறை சார்பில் பறவை இனங்கள், விலங்கினங்கள் குறித்தும், அதன் வாழ்விட சூழல், அரியவகை இனங்கள், அழிவின் விளிம்பில் உள்ள இனங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிய ஆண்டுதோறும் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் வேலூர் வனக்கோட்டத்தில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் யானைகள் குறித்த கணக்கெடுப்பு வரும் 23, 24 ,25 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் முழுவீச்சில் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் 

    தினேஷ் சரவணன் 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad