வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்!
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, இணை இயக்குநர்
(வேளாண்மை) சோமு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தின், உதவி
இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வி உமா மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை விரிவாக மனுக்களாக கொடுத்தும், கோரிக்கையாக எடுத்துக் கூறியும் முறையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை