Header Ads

  • சற்று முன்

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த நபர் கைது

    பல்வேறு கடைகளில் சோதனை செய்ததில் ரூ1.26 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் பல்வேறு இடங்களில் கடைகளில் குட்கா விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் படி வாலாஜாபாத் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை செய்த பொழுது மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் ரூ.1.26 லட்சம் மதிப்பில் 4200 குட்கா பாக்கெட்  மூட்டை கட்டி வைத்திருப்பதை மதுவிலக்கு மற்றும் ஆயத்தேர்வு போலீசார் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர்.


    குட்கா விற்பனையில் ஈடுபட்ட வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த உபைதுல்லா(32) என்பவரை கைது செய்தனர். மேலும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட மூன்று கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    செய்தியாளர் : தினேஷ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad