Header Ads

  • சற்று முன்

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.பட்டாசு ஆலையில் வெடி விபத்து இங்கு எப்பொழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்வது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு எப்பொழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்வது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் உள்ள வயல்கள் பற்றி எரிவதால் அருகே செல்ல முடியாமல் மீட்புப்படையினர் தவிப்பு பட்டாசு ஆலையில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கிலோ பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனிலும் இந்த வெடிவிபத்தில் தீ பற்றியதாக தெரிகிறது. இதனால் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் உள்ள அறுவடை செய்யப்பட்ட சோள வயல்களில் விழுந்ததால், வயல்களும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்புத் துறையினர் வெடி விபத்து ஏற்பட்ட ஆலையினருகே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸுகள், போலீஸார் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர் தீ சற்று தணிந்தால் மட்டுமே அருகில் சென்று பார்க்க முடியும் என தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் தெரிவித்துள்ளனர். இதனால் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குடும்பத்தினர் கவலையுடன் கூடியுள்ளனர். தீயணைப்புத் துறையினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 4 ஆம்புலன்ஸுகள் தயார் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு எப்பொழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்வது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு எப்பொழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்வது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அருகில் உள்ள வயல்கள் பற்றி எரிவதால் அருகே செல்ல முடியாமல் மீட்புப்படையினர் தவிப்பு பட்டாசு ஆலையில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கிலோ பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனிலும் இந்த வெடிவிபத்தில் தீ பற்றியதாக தெரிகிறது. இதனால் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் உள்ள அறுவடை செய்யப்பட்ட சோள வயல்களில் விழுந்ததால், வயல்களும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்புத் துறையினர் வெடி விபத்து ஏற்பட்ட ஆலையினருகே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸுகள், போலீஸார் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். தீ சற்று தணிந்தால் மட்டுமே அருகில் சென்று பார்க்க முடியும் என தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் தெரிவித்துள்ளனர். இதனால் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குடும்பத்தினர் கவலையுடன் கூடியுள்ளனர். தீயணைப்புத் துறையினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 4 ஆம்புலன்ஸுகள் தயார் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad