ஆற்காடு பஸ் நிலைய அருகே கடைகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா குட்கா விற்பனை ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா, ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகிலுள்ள கண்ணன் பூங்கா எதிரில் உள்ள KV பங்க் கடையில் ஆய்வு செய்த போது தேவராஜ் (38) என்பவர் அவரது கடையில் சுமார் 2 கிலோ குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்து வந்ததை கண்டறிந்த காவல்துறையினர் குட்கா மற்றும் ஆன்ஸ் ஆகிய பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு ஆற்காடு வட்டாட்சியர் வசந்தி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் வசந்தி முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டு தேவராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...
கருத்துகள் இல்லை