Header Ads

  • சற்று முன்

    தமிழ்நாடு கோவில் மனையில் குடிருப்போர் சங்கம் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


    தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தின் தீர்மானத்தின்படி, தமிழ்நாடு முழுதும் உள்ள கோயில்மனை சார்ந்து/ சாராது குடியிருப்போர்களின் எண்ணிக்கையை ஆன்லைனில் பதிவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, தமிழ்நாட்டில் 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன, மொத்தம் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் உள்ளனர், இந்த எண்ணிக்கையை நாம் அரசுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவிடுகிறோம், 5,   10 லட்சம்  வாக்குகள் இல்லாத கட்சிகளெல்லாம் அதைக்கொண்டே காரியத்தை சாதித்துக் கொண்டிருக்கும் போது, கோடியில் வாக்காளர்களை கொண்டிருக்கும் நாம் அது வெளியுலகுக்கு   தெரியாமல் இருப்பதால் நம்முடைய பிரச்சணைகள் கேட்பாரற்று இருக்கிறது. எனவே நம்முடைய எண்ணிக்கை யை உறுதி செய்யும் வகையில்  பெயர், விலாசம், கைபேசி எண், ஆதார் எண், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை,  ஆகியவற்றை  ஆன்லைனில் பதிவு செய்ய துவங்கியிருக்கிறோம் . சங்கங்களாக இருப்பவர்கள் சங்கங்கள் மூலமாகவும், ,சங்கங்களாக இல்லாதவர்கள் நேரிடையாகவும், விவரங்களை அளிக்குமாறு மிகவும்  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். விரவில் பாராளுமன்ற தேர்தல்  எதிர்பார்க்கப்படுவதால் அனைவரும் தவறாமல் விரைவாக,  அனுப்பிவைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறறோம். இதுதமிழகத்தில் கோயில்மனை சார்ந்து/ சாராது குடியிருப்போர்களின் எண்ணிக்கையை உலகுக்கு தெரிவிக்கவே இந்த கணக்கெடுப்பு,அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad