• சற்று முன்

    துர்நாற்றம் வீசும் வண்டியூர் கண்மாய்:



    மதுரை சிவகங்கை சாலையில், அமைந்துள்ளது வண்டியூர் கண்மாய். இந்த கண்மாய் மூலம் பல ஏக்கர் விவசாயிகள் பாசனம் செய்வதுடன், மதுரை கோமதிபுரம், வண்டியூர், மேலமடை, பாண்டி கோவில் பகுதிகளில் குடிநீர் ஊற்று ஆதாரமாக திகழ்கிறது. இந்த கன்மாயை பொதுப்பணி துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது .

    இந்த கண்மாயை, முழுவதுமாக ஆகாயத் தாமரைப் படர்ந்து அப்பகுதி செல்வோர் முகம் சுளிக்கும் வரை துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கண்மாய் கரை உயர்த்தியும், கண்மாய ஆழ படுத்தியும் ,பணிகள் மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், இந்த கன்மாயில் கரைகளை உயர்த்தி படகு சவாரி விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கண்மாயில் உள் பகுதிகளில், ஆகாயத்தாமரை  நிறைந்து காணப்படுவதால், அப்பதிகளில் முச்செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. ஆகவே ,தமிழக அரசு பொதுப் பணித்துறையினர் உயர்த்தி விவசாய நலனில் அக்கறை காட்ட வேண்டும் என, இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad