Header Ads

  • சற்று முன்

    ஆட்சிக்கு சாவு மணி அடிக்கக்கூடிய நேரம் நெருங்கி விட்டது.... கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு பேச்சு


    தொழிலாளர்களின் சித்தாந்தத்தை சிதைக்கும் சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்த திமுக அரசை கண்டு கொள்ளாத கம்யூனிஸ்ட் கட்சிக்கு மே தின கூட்டத்தை நடத்த தகுதி இல்லை என -கோவில்பட்டியில் நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு 

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் மே தினத்தை முன்னிட்டு சார்பில் அதிமுகவில் அண்ணா தொழிற்சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து  சிறப்புரையாற்றினார்

    நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் குமுதா பெருமாள் ,நகரச் செயலாளர் விஜய பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்யா,மற்றும் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பொதுக்கூட்டத்தில் கடம்பூர் ராஜூ பேசுகையில் :

    தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் வேலை 12 மணி நேரமாக கொண்டு வர முயற்சி செய்த திமுக அரசு தொழிலாளர்களின் விரோதப் போக்கை கடைபிடிக்கும் அரசாக உள்ளது. இந்த சட்டம் கொண்டு வந்த போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்  வெளிநடப்பு செய்தால் போதுமா வாபஸ் பெற வைக்க வேண்டாமா? 

    சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் சித்தாந்தத்தை  சிதைக்கும் சட்டத்தை வாபஸ் பெறுங்கள் எனக் கூறியிருக்க வேண்டும்.அந்த சட்டத்தை வாபஸ் வாங்காமல் இன்றைக்கு மே தினம் கூட்டம் நடத்த கம்யூனிஸ்டுகளுக்கு என்ன அருகதை இருக்கிறது.

    தொழிலாளருக்கு விரோதமான சட்டத்தை வாபஸ் மே தின கூட்டம் நடத்துவோம். இல்லை என்றால் கருப்பு தின கூட்டம் நடத்துவோம் என சொல்லி இருக்க வேண்டாமா. இன்றைக்கு மே தின கூட்டத்தை கம்யூனிஸ்டுகள் கருப்பு நாளாக அனுஷ்டிக்க வேண்டும். மே தின கூட்டம் நடத்துவதற்கு உரிய தகுதி அதிமுகவுக்கு மட்டும்தான் உள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளை பாதித்து. எந்த ஒரு மக்களுக்கான திட்டமும் கொண்டு வராமல், அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அற்புதமான திட்டங்களை நிறுத்தி விட்டனர். 

    இரண்டு ஆண்டுகளில் என்ன நல்ல திட்டங்கள் கொண்டு வந்துள்ளீர்கள். அடுத்த ஆண்டு மே தின கூட்டம் நடத்தும் போது அப்போது தேர்தல் நடக்கும் அது நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்தக்கூடிய சூழல் நிச்சயமாக வரும். 

    திமுகவின் ஊழலை வெளியிட வேலைகள் தொடங்கியாச்சு ‌‌‌. முப்பதாயிரம் கோடி ஊழல் நிரூபிக்கப்படக்கூடிய ஊழலாக உள்ளது. தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அனைத்து ஆதாரங்களையும் அளித்துள்ளார். எனவே இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்கக்கூடிய நேரம் நெருங்கி விட்டது என்றார் அவர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad