கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் மரணம்
தூத்துக்குடி கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்த முத்துராஜ் (53) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் . இன்று காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்காக கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். தலைமை தபால் அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்த போது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி, உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தென்காசி மாவட்டம் குறிஞ்சி குளம் வடக்கு திருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் மாரிமுத்தை (33) பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை