Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் பேருந்தில் ஏறி பயணிகளை மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு..


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு இயக்கவிருந்த அரசு  பேருந்தில் சில  திருநங்கைகள் பேருந்தில் ஏறி  பயணிகளிடம் பணம் கேட்பதாகவும் இல்லை என்றால் அவர்களிடம் பிரச்சனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது இதனை அறிந்த ஓட்டுனர் அவர்களை கீழே இறங்குமாறு கூறியுள்ளார் அதனை ஏற்க மறுத்து திருநங்கைகள் பயணிகள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடத்துனர் சரவணசாமியை அவதூறாக திட்டி உள்ளனர் இதனால் பேருந்தில் ஏறி பயணம் செய்ய இருந்த பயணிகள் பேருந்து விட்டு இறங்கி மற்றொரு பேருந்தில் பயணம் செய்தனர். 


    இதனால் நடத்துனர் ஓட்டுநர் மதுரைக்கு இயக்க விருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு திருநங்கைகள் மீது மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து இம்மாதிரியான சம்பவங்கள் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அரங்கேறி வருவதால் காவல்துறையினர் உடனடியாக விவகாரத்தில் தலையிட்டு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad