Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் புல்வாமா தாக்குதல் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய மாணவர்கள்


    புல்வாமா தாக்குதல் 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்தது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிஆா்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் அருகே உள்ள இராமனூத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராஹிம் தலைமையில் எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


    பின்னா் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி  மாணவ மாணவியிா்கள்  பேரணியாக மௌன அஞ்சலி ஊர்வலம் சென்றனர் .


    இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை இந்திரா, தன்னார்வலர் ஐயப்பன்,கிளைச் செயலாளர் காளியப்பன் உட்பட பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad