ஆணவ கொலை களம் நூல் வெளியீட்டு விழா
சு.கீ..குமார் அவர்கள் எழுதிய ஆணவ கொலை களம் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடல் மணியம்மைஅரங்கில் நடைபெற்றது. முதலில் சிங்காரவேலர் 73வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ,தொடர்ந்து வரவேற்புரை ஆசிரியர் ச. தனம் அளிக்க திருமிகு.கு.செல்வப்பெருந்தகை, முதற்பிரதியை வெளியிட தோழர் C.மகேந்திரன் பெற்றுக்கொண்டார். மேலும் வழக்கறிஞர் ப.பா.மோகன் இளசை கணேசன், பேராசிரியர் சி. முருகன், வழக்கறிஞர் புத்தநேசன் ஆகியோர் உரையாற்றினார்கள். தோழர்கள் த.கு.வெங்கடேசன், ப.கருணாநிதி, S.K. சிவா, வசந்தபாரதி, சுப்பிரமணி,ரமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். நன்றியுரை கோட்டி சுரேஷ் நவின்றார்.
கருத்துகள் இல்லை