Header Ads

  • சற்று முன்

    எடப்பாடியை, வரவேற்க அதிமுக நிர்வாகிகள் தீவிரம்:

    மதுரை, ராமநாதபுரத்திற்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு எழர்ச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். மதுரை ரிங் ரோடு கருப்புசாமி கோயில் அருகே, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் , பத்தாயிரம்  எடப்பாடியார் தலைமையேற்று,  இணையும் விழா நடைபெறும் இடத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்  ஆய்வு செய்தார். அவருடன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆர் பி .உதயகுமார் கூறியதாவது: கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார், தென் மாவட்ட மக்களின் வேண்டுகோளை ஏற்று மதுரை, திண்டுக்கல், பழனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகை புரிந்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத் தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பை அளித்தனர். இதனைத் தொடர்ந்து, வருகின்ற ஐந்தாம் தேதி தைப்பூசம் அன்று கழகத் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக எடப்பாடியார் வருகை தருகிறார். 5ம் தேதி, காலை 9 மணிக்கு ரிங் ரோடு வலையங்குளம் அருகே உள்ளகருப்பசாமி கோயில் அருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் பத்தாயிரம் பேர் எடப்பாடியார் சீரிய தலைமை ஏற்று, கழகத்தில் இணையும் மாபெரும் விழா நடைபெறுகிறது .

    இதில் பங்கேற்கும் எடப்பாடியாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையாவின் இல்ல திருமண விழாவை நடத்தி வைக்க பரமக்குடிக்கு சாலை மார்க்கமாக எடப்பாடியார் செல்கிறார் .அங்கு 5 முனை ரோடு அருகே  ராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ.  முனியசாமி தலைமையில், எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது என்று கூறினார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad