Header Ads

  • சற்று முன்

    இயற்கையைப் பற்றி தெரிந்து கொள்ள காட்டுப்பகுதியில் மாணவர்களுக்கு பயிற்சி.


    கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், இயற்கையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'இளம் வனச்சரகர்கள்' எனும் மூன்று நாள் பயிற்சியை நடத்தியது.இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 30 பேர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில், முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் முகாம், சோலை வனங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாடு மரத்தோட்டங்கள், பல்லடுக்கு வேளாண்காடு வளர்ப்பு மற்றும் காடுகளின் வகைகள் உள்ளிட்டவற்றை, மாணவர்கள் களப்பயணம் மூலம் கற்றுக் கொண்டனர்.

    வனச்சரக அலுவலரின் ஒரு நாள் பணிகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தவிர, வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களிலேயே காண, முதுமலையில் வனச்சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வகுப்பறை நிகழ்வில், 'கோத்தகிரி மலையின் குகை ஓவியங்கள், தேன் கூடுகள் தேடி, யானைகளின் உலகம், பரவசம் தரும் பட்டாம்பூச்சிகள், மனம் கவரும் மலையேற்றம் மற்றும் சூழல் முகாம்கள்' போன்ற தலைப்புகளில், விரிவுரைகள் அளிக்கப்பட்டன. இப்பயிற்சியில், பங்கேற்ற மாணவர்களுக்கு, புத்தகங்கள், சீருடைகள் மற்றும் சான்றிதழ்கள். வழங்கப்பட்டன.இப்பயிற்சியை, மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குன்னி கண்ணன் தொடங்கி வைத்தார். விரிவாக்கத்துறை தலைவர் சரவணன், வன அலுவலர் மாதவராஜ் தொழில்நுட்ப அலுவலர்கள் சந்திரசேகரன், அனிதா ஆகியோர் பயிற்சியை நடத்தினர். சிறப்பு விருந்தினராக, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பாண்டிய ராஜசேகரன் கலந்து கொண்டார்.

    கோவை நிருபர் : அக்கினிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad