Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் தை பூசம் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி குடவரை திருக்கோவிலில்  தைப் பூச திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 



    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது.காலை, மாலை வேளைகளில் வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதி உலா நடைபெறும் விழாவின் முக்கிய  நிகழ்வாக பிப்ரவரி 5 ம் தேதி திரு தேரோட்டம் நடைபெற  உள்ளது கொடியேற்று நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி  உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad