Header Ads

  • சற்று முன்

    மதுரையில் இட்லிகடை நடத்திவந்த பிரபல ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல் பரபரப்பு - காவல்துறையினர் விசாரணை

    மதுரை திலகர்திடல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான அலெக்ஸ் இவர் மீது மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அலெக்ஸ் தற்போது இட்லிகடை ஒன்றை நடத்திவருகின்றார் இவரது வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக திலகர்திடல் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளளது இதனையடுத்து தகவலின் அடிப்படையில்  பிரபல ரவுடியான அலெக்ஸ் வீட்டிற்குள் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் அறை ஒன்றில் துப்பாக்கி ஒன்று பதுக்கிவைத்திருப்பதை கண்டுபிடித்த கரிமேடு காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் அலெக்ஸ்  வீட்டில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஏர்கன் வகை துப்பாக்கி என தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிக்கான அனுமதி பெற்றுள்ளாரா? வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் பிரபல ரவுடி வீட்டில் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad