Header Ads

  • சற்று முன்

    மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு.


    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் திடீரென மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்குள் சென்றார். அங்கு இரவு பணியில் மருத்துவர்கள் உள்ளனரா? அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.  பொதுப்பிரிவு, பேறுகால பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என மருத்துவமனையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளை சந்தித்து உரிய முறையில் சிகிச்சை கிடைக்கிறதா? மருத்துவர்கள் எப்படி கவனித்து கொள்கின்றனர் என நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.  மேலும் நோயாளி ஒருவருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்களையும் ஆய்வு அறிக்கைகளை ஒப்பிட்டு சரிபார்த்த நிலையில் மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா? எனவும் ஆட்சியர் சமீரன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் சீனாவில் இருந்து மலேசியா வழியாக கோவைக்கு வந்த நபர் ஒருவருக்கு கொரானோ கன்டறியப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை உஷார் படுத்தப்பட்டு விழிப்புணர்வுடன் இருக்க இந்த ஆய்வு நடந்ததாக கூறப்படுகிறது.

    கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad