வேலூர் தோட்டப்பாளையம் எஸ்.கே. டி .மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில் குழந்தைகள் தின விழா
வேலூர் மாவட்டம் வேலூர் தோட்டப்பாளையம் எஸ்.கே. டி .மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில் குழந்தைகள் தின விழாவினையொட்டி மலபார் நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு மலபார் நிறுவனத்தின் மேலாளர் அனீஸ் ரஹமான், மற்றும் துணை மேலாளர் சித்தார்த் ,ஆகியோர் பரிசு வழங்கினர். விழாவில் பள்ளியின் முதல்வர் எஸ் .விசாலாட்சி ,தாளாளர் டி. சுந்தர், செயலாளர் ஜி .பாலாஜி ,பொருளாளர் கே .கிருஷ்ணமூர்த்தி , மற்றும் ஆசிரியர்களும், மலபார் நிறுவனத்தின் ஊழியர்களும் ,மாணவர்களும், கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் : S. சுதாகர்
கருத்துகள் இல்லை