Header Ads

  • சற்று முன்

    6 பேர் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது - தமிழக முதல்வருக்கு நன்றி ரவிச்சந்திரன் தாயார் ராஜேஸ்வரி கோவில்பட்டி அருகே பேட்டி


    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேரும் சிறையில் இருந்தனர். 

    இதில் பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள சூரப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரனும் ஒருவர். பரோலில் தங்கி இருக்கிறார்.  விடுதலை செய்ய நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து ரவிச்சந்திரன் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் தாயார் ராஜேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறுகையில் 6 பேருக்கு விடுதலை தங்களுக்கு மகிழ்ச்சி தருவதாகவும், தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகவும், தமிழக அரசு தான்  எடுத்துள்ளது. 32 ஆண்டுகளாக கஷ்டப்பட்டதுக்கு விடுதலை கிடைச்சிருக்கு, என் மகன் விடுதலை கிடைத்தது சந்தோசமாக இருக்கிறது, ரவிச்சந்திரன் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

    இதன் கண்ணொளியை nms today youtube சேனலில் பார்க்கவும் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad