Header Ads

  • சற்று முன்

    நிலக்கோட்டை வாரச்சந்தையில் அரசு நிர்ணயத்த தொகையை விட அதிக கட்டணம் வசூல்


    நிலக்கோட்டை வாரச்சந்தையில் அரசு நிர்ணயத்த தொகையை விட அதிக கட்டணம் வசூல் செய்வதால் வியாபாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையே தொடரும் சண்டை மேலும் பேரூராட்சி மற்றும் ஒப்பந்ததாரர்கள் சந்தையில் எந்த ஒரு பராமரிப்பு பணியும் செய்யாமல் விட்டுவிட்டதால் நிலக்கோட்டை விளாம்பட்டி சாலையில் காய்கறி உள்பட பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் சந்தை வியாபாரிகள் அலட்சியமாக பதில் அளிக்கும் பேரூராட்சி நிர்வாகம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி மையப்பகுதியில் வாரச்சந்தை நடைபெறும். 


    சனிக்கிழமை தோறும் சந்தை நிறைவேறுவதால் சந்தைக்கு நிலக்கோட்டை கொடைரோடு அம்மையநாயக்கனூர் விளாம்பட்டி வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடு கோழி மற்றும் காய்கறிகள் உட்பட அனைத்து பொருட்களும் கிடைப்பதால் அதிகளவு பொதுமக்கள் வருவது வழக்கம் அதேபோல் சந்தைக்கு திண்டுக்கல் மதுரை தேனி உசிலம்பட்டி வத்தலகுண்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தங்களது விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் அதேபோல் ஆடு கோழி உள்ளிட்டவைகளை விற்பனை செய்பவர்களுக்கு வியாபாரிகளும் விவசாயிகளும் வருவது வழக்கம் இந்நிலையில் நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் சந்தை வியாபாரிகளுக்கு ரூபாய் 50 கட்டணமாக வசூல் செய்ய கூறியுள்ள நிலையில் சந்தை ஒப்பந்ததாரர் ரூபாய் 100 வசூல் செய்கிறார் அதேபோல் சந்தை பகுதி முழுவதும் பராமரிப்பு இன்றி தண்ணீர் தேங்கி சேரும் சக அதிகமாக உள்ளது இதன் காரணமாக சந்தை வியாபாரிகள் தற்போது நிலக்கோட்டை விளாம்பட்டி சாலையில் கடைகள் அமைத்துள்ளனர் இது பற்றி வியாபாரிகள் சந்தை ஒப்பந்தகால இடம் சந்தைக்குள் எந்த ஒரு பராமரிப்பு பணியும் செய்யாமல் அதிக கட்டணமாக 100 ரூபாய் வசூல் செய்கிறீர்கள் என்று கேட்ட பொழுது ஒப்பந்ததாரர் ஊழியர்கள் வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது இன்றும் அதே போல் ஒரு வியாபாரியை சந்தை ஊழியர் தாக்குவது நடைபெற்றுள்ளது தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்ட பொழுது போனை எடுக்கவில்லை முறையற்ற முறையில் வியாபாரிகளிடம் வசூல் செய்யும் சந்தை ஒப்பந்தக்காரர் மீதும் அதேபோல் பேரூராட்சி நிர்வாகத்தின் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு நிர்ணயித்த தொகையை வசூல் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad