காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரியில் நேரு தின விழா
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நேரு மையத்தின் சார்பில் குழந்தைகள் தின விழா கல்வியில் கல்லூரியில் கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. நேரு கல்விமையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சித்ரா தேவி வரவேற்புரையாற்றினார். துணை வேந்தர் பேரா.க. ரவி அவர்கள் தலைமையுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் இணைப் பேராசிரியர் முனைவர் சிதம்பரம் சிறப்புரையாற்றினார். அழகப்பா பல்கலைக்கழக மாற்றுத்திறன் பள்ளி மாணவர்களுக்கு நேரு கல்வி மையம் சார்பாக துணைவேந்தர் அவர்களால் கல்விச் சாதனங்கள் பரிசளிக்கப்பட்டது. மேலும் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மனவியர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிறைவாக நேரு கல்வி மைய இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.சிவங்கை மாவட்ட செய்தியாளர் : சண்முக சுந்தரம்
கருத்துகள் இல்லை