வாலாஜா நகராட்சி பகுதிகளில் 73 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரில் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன 73 சிசி டிவி கேமராக்களின் பயன்பாட்டிற்கு நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார் நகராட்சி மன்ற தலைவர் ஹரிணி தில்லை, வரவேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் மற்றும் மற்றும் துணை தலைவர் கமலராகவன், மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரபு, மற்றும் வாலாஜா வட்டாட்சியர் நடராஜன், அனைத்து கவுன்சிலர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக வாலாஜா நகராட்சி அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் வந்தபோது நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் நுழைவு வாயில் சென்று வரவேற்று அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர் இதில் நகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியரை வரவேற்க வரவே இல்லை ? மாவட்ட ஆட்சியரை அவமதித்த நகராட்சி ஆணையர் மீது அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர் இதுகுறித்து சமூக ஊடகங்களில் இச்செய்தி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை