Header Ads

  • சற்று முன்

    மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவைசிகிச்சை செய்ததால் பெற்றோர் அதிர்ச்சி

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25) என்பவரது மனைவி கார்த்திகா(23)விற்கு  கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்து நாக்கு வளர்ச்சி இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதால் கடந்த ஆண்டு நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்

    ஓராண்டு கழித்து மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் மீண்டும் நேற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனுக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது குறித்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கேட்டபோது  மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

    இது குறித்து குழந்தையின் தந்தை மதுரை அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஒரு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சையை மாற்றி அறுவை சிகிச்சை செய்த அதிர்ச்சி சம்பவம் எதிரொலியாக சைல்டு்லைன் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் கேட்டபோது:- அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் சரியாக பெற்றோர்களிடம் சொல்லாததால் தான் இந்த பிரச்சனை என்றும், குழந்தையின் நீர்  பாதையில் அடைப்பு இருந்ததால் முதலில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்து, பின்னர் நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளோம் என மழுப்பலாக பதில் அளித்தார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad