Header Ads

  • சற்று முன்

    யார் பெரியஆள் என்பதை நிரூபிக்க துப்பாக்கி சூடு., திருமங்கலத்தில் பரபரப்பு.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளத்தைச் சேர்ந்த தனசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தனசேகரன் நேர்த்திக்கடனுக்காக திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் கிடாய் விருந்து வைத்துள்ளார். தனசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் என்பதால் அது தொடர்பான நண்பர்களை கிடாய் விருந்துக்கு அழைத்துள்ளார்.

    இந்த விருந்திற்காக மதுரையைச் சேர்ந்த ரியல் அதிபர் வேதகிரி மற்றும் திருமங்கலம் அருகே தொட்டியபட்டி பகுதியை சேர்ந்த கணபதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். விருந்திற்கு வந்தவர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள மரத்தடி ஒன்றில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். மது போதை அதிகமாகவே., அங்கிருந்த கணபதி மற்றும் வேதகிரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வேதகிரி நீ பெரிய ஆளா.? நான் பெரிய ஆளா.? என காண்பிக்கிறேன் பார்.! எனக் கூறி தனது காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதில் அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடி விட்டனர். 

    இந்நிலையில் சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற் கொண்டபோது போலீசார் வருவதை கண்ட வேதகிரி தனது காரில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி கிடாய் விருந்து வைத்த தனசேகரன் மற்றும் தப்பி ஓடிய வேதகிரி அலுவலக உதவியாளர் சக்திவேல் மற்றும் கணபதி ஆகியோரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த டிஎஸ்பி வசந்தகுமார் தலைமையிலான போலீசார் துப்பாக்கியால் சுட்ட வேதகிரியை உடனடியாக பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட சம்பவத்தை அடுத்து திருமங்கலம் கோட்டாட்சியர் செளந்தர்யா மற்றும் வட்டாட்சியர் சிவராமன் உள்ளிட்டோர் பத்ரகாளி கோவில் வளாகம் அருகே விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

    மேலும்., சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிடாய் விருந்து பங்கேற்ற நண்பர்கள் மது அருந்தி மது போதை தலைக்கு ஏறியதால் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டு யார் பெரியவர்.? என்பதற்காக கை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad