Header Ads

  • சற்று முன்

    மதுரை அலங்காநல்லூர் அருகே வேட்டைக்குச் சென்ற இளைஞர் மின்வேலியில் சிக்கி பலி - 5 வேட்டை நாய்களும் பலியான பரிதாபம்.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (35). கூலி வேலை பார்க்கிறார். இவர் தான் வளர்க்கும் வேட்டை நாய்களுடன் நேற்றிரவு காட்டுப் பகுதிக்கு வேட்டைக்கு சென்றார். இந்நிலையில் அலங்காநல்லூர் அருகே அய்யனகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள ஒரு சம்பங்கி பூந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் வேட்டை நாய்களுடன் இறந்து கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



    மேற்கொண்ட விசாரணையில் அய்யனகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் (42) என்பவரின் சம்பங்கி தோட்டத்தில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி வேட்டைக்குச் சென்ற மாணிக்கமும், 5 வேட்டை நாய்களும் பரிதாபமாக இறந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் சம்பங்கி தோட்டக்காரர் அசோக்குமாரிடம் அலங்காநல்லூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வேட்டைக்குச் சென்ற 5 நாய்கள் உட்பட இளைஞர் ஒருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad