கோவில்பட்டி அருகே பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை.
திருநெல்வேலி குலவணிகபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் பாளை மத்திய சிறையில் தலைமை காவலராக பணியில் வருகிறார்.இவரது மனைவி உமாமகேஸ்வரி(34) திருநெல்வேலி ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக தண்டுவடத்தில் வலி ஏற்பட்டதால் நடக்க முடியாமல் இருந்துள்ளார். இதனால் உமாமகேஸ்வரி தனது அப்பா ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள தெற்கு கோனார்கோட்டையில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நடக்க முடியாத மனவேதனையில் இருந்த உமாமகேஸ்வரி இன்று அவரது அப்பாவின் வீட்டில் ஜன்னல் கம்பியில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த கயத்தார் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று உமாமகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து கயத்தார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை